மாடக்குளம் பாம்பலம்மன் திருக்கோவில் அஷ்ட பந்தன நன்னீராட்டு பெருவிழா
மாடக்குளம் பாம்பலம்மன் திருக்கோவில் அஷ்ட பந்தன நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-17 11:52 GMT
நன்னீராட்டு விழாவில் கலந்து கொண்டவர்கள்
மதுரை மாவட்டம் மாடக்குளம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பாம்பலம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை விநாயகர் ஹோமத்துடன் துவங்கியது. அதனை தொடர்ந்து கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலையிலிருந்து எடுத்து வரப்பட்ட புனித நீரானது கோபுர கலசத்திற்கு ஊற்றப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் மாடக்குளம் பகுதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மாடக்குளம் பகுதி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது