மதுரை அருகே நாகேஸ்வரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்

மதுரை அருகே நாகேஸ்வரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழாவில் ஊர் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

Update: 2024-06-13 10:07 GMT

கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டவர்கள்

மதுரை நாகமலை புதுக்கோட்டை சின்னக்ககண்ணூ நகர் நாகமலை அடிவாரத்தில், அமைந்து அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ நாகேஸ்வரி அம்மன் புற்று மற்றும் மஹா கணபதி கருப்பணசாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில், ஊர் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

இதில், அதனைத் தொடர்ந்து மாபெரும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, திருப்பணிக்குழு, சிறப்பாக செய்து இருந்தனர். முன்னதாக கோயில் முன்பாக யாக பூஜைகள் நடைபெற்றது.

Tags:    

Similar News