நாமக்கல் ஏகாம்பர ஈஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை
பக்தர்கள் சாமி தரிசனம்;
Update: 2023-09-13 07:00 GMT
ஏகாம்பர ஈஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை
நாமக்கல் தட்டார தெருவில் ஏகாம்பர ஈஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆவணி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி நேற்று சிவன் மற்றும் நந்தி சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.
மேலும் பால், இளநீர், மஞ்சள், சந்தனம், தேன் மற்றும் பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து சாமிக்கு சிறப்பு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.