பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம் !!

Update: 2024-09-11 00:30 GMT

பிரம்ம முகூர்த்தம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள்ளான வேளைக்கு பிரம்ம முகூர்த்தம் என்று பெயர். இரவில் உறங்கும் உயிர்கள் மீண்டும் எழுந்திருப்பதே சற்றே ஏறக்குறைய மறுபிறவிதான்.

எனவே ஒவ்வொரு நாளும் காலையில் மறு பிறவி பெறுவதை “சிருஷ்டி' (படைத்தல்)என்று சொல்லலாம். இத்தொழிலைச் செய்பவர் பிரம்மா. எனவே இவரது பெயரால், விடியற்காலைப் பொழுதை "பிரம்ம முகூர்த்தம்' என்று வைத்துள்ளார்கள்.

பிரம்ம முகூர்த்தம் என்பது, பிரம்மா எனப்படும் நான்முகனை குறிக்கின்றது. படைக்கும் தொழில் புரியும் நான்முகன் தன்னுடைய நாவில் சரஸ்வதி அமரச் செய்து 24 கலைகளையும் படைத்தார்.

பிரம்ம முகூர்த்த வேளைக்கு திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது. இது எப்போதுமே சுபவேளை தான். இந்நேரத்தில் எழுந்து குளித்து இறைவழிபாட்டைச் செய்து வேலைகளைச் செய்ய துவங்கினால் அன்று முழு வெற்றிதான்.

Tags:    

Similar News