சிறுவயதில் ஏன் பஞ்சலோகம் அணிய வேண்டும்?

Update: 2024-07-20 09:03 GMT

பஞ்சலோகம்

சிறுவயதில் காலில் தண்டை அணிவது வழக்கம். இதிலுள்ள உட்கருத்துக்கள் அறியாமல், தங்கள் நிதி வசதிக்கேற்ப தங்கத்திலோ, வெள்ளியிலோ தண்டை செய்து பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அணிவிக்கின்றனர்.

இதனால் எந்த பலனும் கிடைப்பதில்லை என்பதே நிஜ நிலை. பதிலாக பஞ்சலோகத்தில் தண்டை அணிந்தால் அது பயனளிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம் என்பவை சேர்ந்த உலோகக் கலவையே பஞ்சலோகம்.

நாம் வாழும் பிரதேசத்தில் பொதுவாக உலோக அம்சம் குறைந்த மண் காணப்படுகின்றது. இந்த குறை இயற்கையிலும் இங்கு வசிக்கும் மனிதரிலும் பிரதிபலிக்கும்.

இதைப்புரிந்து கொண்டதனால் பண்டைய மக்கள் பஞ்சலோக த்தின் உபயோகத்தை பரிந்துரை செய்தனர் என்பதில் சந்தேகமில்லை.

பஞ்சலோகத்தின் சக்தி மனித உடலைச்சுற்றி வரும் பிராண சக்தியை பலப்படுத்தி உடலின் உலோக சக்தியை அதிகரிக்கவும் செய்யும். இதற்காகவே சிறு வயதில் பஞ்சலோகம் அணிவது.

Tags:    

Similar News