செல்வ வளத்தை பெற்று தரும் அம்மன் வழிபாடு

Update: 2024-01-04 12:40 GMT

அம்மன் வழிபாடு

சிவனிடம் இருந்து சக்தியை ஒருபோதும் பிரிக்க முடியாது. உலகமே சிவ சக்தி மையமாக உள்ளது. வீடுகளில் தினமும் காலை, மாலை என இருவேளையும் விளக்கேற்றி வைத்து செம்பருத்தி. அரளி ஆகிய மலர்களால் அர்ச்சித்து வழிபடலாம்.

குறிப்பாக செவ்வாய் ,வெள்ளிக்கிழமைகளில் அம்பிகையை பூஜிக்க மிகவும் ஏற்ற தினங்களாகும். அதிலும் முறைப்படி பயபக்தியுடன் அன்னையை வழிபட்டால் நிறைய பலன்களை பெறலாம் .

எனவே ஆலயங்களிலும்.வீடுகளிலும் அம்பிகையை பராசக்தியாக போற்றி அவசியம் வழிபட வேண்டும் . வேதங்கள் வகுத்தப்படி பராசக்தியை வழிபடுபவர்களுக்கு இந்திர பதவியை தருவாள் என்கிறார் அபிராமி பட்டர்.

Tags:    

Similar News