சத்தியமங்கலத்தில் 8.5 கிலோ சந்தன கட்டை பறிமுதல்
சத்தியமங்கலத்தில் 8.5 கிலோ சந்தன கட்டை பறிமுதல் ஒருவர் கைது
By : King 24X7 News (B)
Update: 2024-06-27 13:19 GMT
கோப்பு படம்
சத்தி வனத்துறை அதிகாரிகள் மற்றும் பங்களாபுதூர் போலீஸார் இணைத்து கே.என். பாளையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கே.என்.பாளையம் நரசாபுரத்தில் வசிக்கும் கட்டை பெருமாள் (64) என்பரின் வீட்டை சோதனையிட்டனர். வீட்டில் வைத்திருந்த பையில் சுமார் 8.500 கி.கி சந்தன மரக் கட்டைகள் இருந்ததை கண்டறிந்தனர். இதையடுத்து சந்தனக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.