மதுவில் விஷத்தை கலந்து குடித்து கூலித்தொழிலாளி தற்கொலை!

குடியாத்தம் அருகே கூலி தொழிலாளி மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-04-16 15:58 GMT

தற்கொலை

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த மேல்பட்டிரோடு கார்த்திகேயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (31), கூலித்தொழிலாளி.இவரின் மனைவி நந்தினி.இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். ராஜ்குமாருக்கு மதுபானம் குடிக்கும் பழக்கம் உண்டு.அவர் தினமும் மதுபானம் குடித்து வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். வழக்கம் போல் மதுபானம் குடித்து விட்டு வந்து ராஜ்குமார் தனது மனைவி நந்தினியிடம் தகராறில் ஈடுபட்டார். கணவரிடம் கோபித்துக் கொண்டு நந்தினி அருகில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.மீண்டும் குடிபோதையில் இருந்த ராஜ்குமார் மதுவில் விஷத்தை கலந்து குடித்து விட்டு மயக்கமடைந்து கிடந்தார். அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை, டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் ராஜ்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாகக்கூறினர். இதுகுறித்து நந்தினி கொடுத்த புகாரின் பேரில் குடியாத்தம் டவுன் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News