தென் சென்னையில் திமுகவினர் கள்ள ஓட்டு போட்டதாக அதிமுக குற்றச்சாட்டு

மயிலாப்பூர் கணபதி நகர் பகுதியில் திமுகவினர் கள்ள ஓட்டு போட்டதாக அதிமுக வேட்பாளர் ஜெயவர்த்தன் மற்றும் அதிமுகவினர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

Update: 2024-04-20 00:57 GMT

தென் சென்னை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பூத் 13 இல் ஆளும் திமுக கட்சியினர் மாலை 5:30மணிக்கு மேல் அதிமுக பூத் கமிட்டியினரை வெளியில் அனுப்பிவிட்டு வாக்கு பதிவு மையத்தை கைப்பற்றி, 200 வாக்குகளுக்கு மேல் செலுத்தியதாக தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்த்தன் , தென் சென்னை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்துள்ளார். அதற்கு தேர்தல் அலுவலர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

மயிலாப்பூர் கணபதி காலணி 3 ஆவது தெருவில் உள்ள வாக்கு சாவடியில் மாலை 5:30 மணி அளவில் அதிமுக பூத் ஏஜென்ட்கள் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேறிய பின் கடைசி அரை மணி நேரம் திமுகவினர் கள்ள ஓட்டு போட்டதாக அதிமுகவினர் குற்றச்சாட்டு வைத்தனர்.

மறு வாக்குபதிவு செய்யப்பட வேண்டும் என்று அதிமுகவினர் தெரிவித்தனர், இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது, பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Tags:    

Similar News