மாற்று பாலினத்தவரை சிறப்பு பிரிவினராக கருத சென்னை ஐகோர்ட் உத்தரவு!

Update: 2024-06-13 10:02 GMT

சென்னை ஐகோர்ட் உத்தரவு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கல்வி, வேலைவாய்ப்பில் மாற்று பாலினத்தவரை சிறப்பு பிரிவினராக கருத தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2017-18-ம் ஆண்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 ஏ தேர்வில் கலந்து கொண்ட மூன்றாம் பாலின விண்ணப்பதாரரான அனுஸ்ரீ என்பவர், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தன்னை அனுமதிக்கும்படி உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கில் மாற்று பாலினத்தவர்கள் தரமான வாழ்க்கையை வாழ வைக்க வேண்டியது அரசின் கடமை. மூன்றாம் பாலினத்தவர்களை கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு ஆண்களாகவோ, பெண்களாகவோ கருதாமல் தனிப் பிரிவினராக கருத வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

உரிய வாய்ப்புகளை வழங்க மறுத்தால் சமூகத்தில் அசாதாரணமான வாழ்க்கைக்கு தள்ளப்படுவர். 2022-ம் ஆண்டு நடந்த குரூப் 2 தேர்வில் மனுதாரரின் சான்றிதழை சரிபார்க்க அனுமதிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். 

Tags:    

Similar News