ஒரே டிக்கெட் நடைமுறைக்கு டெண்டர் கோரியது சென்னை போக்குவரத்து குழுமம்

சென்னையில் அனைத்து போக்குவரத்து சாதனங்களுக்கும் ஒரே டிக்கெட் நடைமுறையை கொண்டு சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் சார்பில்வர டெண்டர் கோரப்பட்டுள்ளது.

Update: 2024-03-01 17:06 GMT
சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என்று அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறையை செயல்படுத்துவதற்கான செயலியை உருவாக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் டெண்டர் கோரி உள்ளது. சென்னையில் பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்தின் முதல் கூட்டத்தில் சென்னை முழுவதும் பொதுப் போக்குவரத்து முறைகளில் பயணம் செய்ய ஒரே டிக்கெட் அறிமுகம் செய்யும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த திட்டத்தை செயல்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டது. குறிப்பாக இதற்கு தனியாக செயலி ஒன்று உருவாக்க முடிவு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், அந்த செயலியை உருவாக்கும் பணிகளை மேற்கொள்ள சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் டெண்டர் கோரியுள்ளது.
Tags:    

Similar News