தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்து கொள்கிறது: துரைமுருகன் பேட்டி

எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நோக்கத்தோடு மத்திய அரசு செயல்படுகிறது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-30 07:08 GMT

துரைமுருகன்

வேலூரில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில்," எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நோக்கத்தோடு மத்திய அரசு செயல்படுகிறார்கள்.அவர்கள் ஆளுங்கட்சியினர்.அரசு அவர்கள் கையில் கையில் உள்ளது,அதன் மூலம் அவர்களை பாதுகாத்துக் கொள்கிறார்கள். அதற்கு நாம் என்ன செய்ய முடியும்.அதற்கு மக்கள் தான் தீர்ப்பளிக்க வேண்டும்.பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் உள்ள கட்சியினர்கள் கேட்டால் அவர்களுக்கு தேவையான சின்னங்கள் வழங்கப்படுகிறது.எதிர்க்கட்சியினர் ஏற்கனவே பயன்படுத்திய சின்னமாக இருந்தாலும் அவர்களுக்கு அது மறுக்கப்படுகிறது. இதனால் மற்றவர்கள் சொல்வது போல் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்து கொள்வது என்பது தெளிவாக தெரிகிறது என கூறினார்.
Tags:    

Similar News