கேரள அரசு அணை கட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் - முத்தரசன்

கேரள அரசாங்கம் தமிழக அரசாங்திடம் கேட்ககாமல் ஒரு அணை கட்டுவது இது கண்டனத்துக்கு உரியது அணை கட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என முத்தரசன் கூறியுள்ளார்.

Update: 2024-05-24 13:37 GMT

கேரள அரசாங்கம் தமிழக அரசாங்திடம் கேட்ககாமல் ஒரு அணை கட்டுவது இது கண்டனத்துக்கு உரியது அணை கட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என முத்தரசன் கூறியுள்ளார்.


கோபிச்செட்டிப்பாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது , இந்த 17 வது பொதுத்தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தி உள்ளது என்றும் தமிழ்நாட்டிற்க்கு வரும் பொழுது திருவள்ளுவர் கப்பலோட்டி தமிழன் ஆகியோரை புகழ்ந்து பேசிவிட்டு வடமாநிலங்களில் தமிழர்களை திருடர்கள் எனக்கூறுகிறார் மோடி என்றும் மோடி தன்னை கடவுள் என்று கூறுகிறார் மக்களுக்கு இருக்கும் கடவுள் நம்பிக்கை பயன்படுத்தி மக்களை வெறியேற்றி வருகிறார் என்றார். மோடியின் கட்டுப்பாட்டுக்கு தேர்தல் ஆணையம் சென்றுவிட்டதாகவும் ,வாக்குகள் என்னும் போது என்வெல்லாம் நடக்கபோகிறது என்றாலே அச்சமாக இருக்கிறது என்றார்.கேரள அரசாங்கம் தமிழக அரசாங்திடம் கேட்ககாமல் ஒரு அணை கட்டுவது இது கண்டனத்துக்கு உரியது அணை கட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அப்படி கேரள அரசாங்கள் அணை கட்டினால் திருப்பூர் கரூர் மாவட்டங்களில் குடிநீர் பஞ்சம் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும் என்றார்.
Tags:    

Similar News