தேசிய விளையாட்டு : போல்ட் வால்டில் மயிலாடுதுறை வீராங்கனைக்கு தங்கம்

மயிலாடுதுறை மாவட்ட போல் வால்ட் வீராங்கனை பரணிகா கோவாவில் நடைபெற்ற 37-வது தேசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.

Update: 2023-11-03 04:45 GMT

பரணிகா 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

37-வது தேசிய விளையாட்டுப் போட்டி கோவாவில் உள்ள பேம்புலிம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் போல் வால்ட் எனப்படும் கோல் ஊன்றி உயரம் தாண்டுதல் போட்டியில், இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 14 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, போட்டியில் பங்கேற்றனர். இந்த போட்டியில் தமிழ்நாடு சார்பில் மயிலாடுதுறை அருகே உள்ள சேத்திரபாலபுரம் கிராமத்தைசேர்ந்த வீராங்கனை பரணிகா பங்கேற்றார். போட்டியில் தனது சிறப்பான விளையாட்டு திறனை வெளிப்படுத்திய அவர் 3.90 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தை வென்றார். இவர் ரயில்வே துறையில் எழுத்தராக பணியாற்றி வருகிறார்.

Tags:    

Similar News