சவுக்கு சங்கரை புழல் சிறைக்கு மாற்ற உத்தரவு

சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளதால் சவுக்கு சங்கரை புழல் சிறைக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளனர்.

Update: 2024-05-24 14:42 GMT

சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளதால் சவுக்கு சங்கரை புழல் சிறைக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளனர்.


யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை எதிர்த்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளது. குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்து நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டார். சவுக்கு சங்கரின் தாய் மனுவுக்கு பதிலளிக்க அரசுக்கு அனுமதியளித்த பின் ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என நீதிபதி பாலாஜி உத்தரவிட்டார். இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு காரணமாக வழக்கை 3 ஆவது நீதிபதி விசாரணைக்காக தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவில் போதைப்பொருள் வழக்கை குறிப்பிடவில்லை , அதிகாரம் மிக்க நபர்கள் இந்த வழக்கு தொடர்பாக தன்னிடம் பேசியதால் தான் அவசரமாக இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டதாக நீதிபதி சுவாமிநாதன் விளக்கம் அளித்துள்ளார். சவுக்கு சங்கரை கோவை சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என இரு நீதிபதிகளும் ஒருமித்த கருத்தில் உத்தரவிட்டுள்ளனர்.

Tags:    

Similar News