என் மகனை சிறைக்கு அனுப்பவும் தயார் - துரைமுருகன் பரபரப்பு பேச்சு

வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது.

Update: 2024-03-22 11:21 GMT
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்தை அறிமுகம் செய்யும் பொதுக்கூட்டம் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே நடந்தது. வேட்பாளர் கதிர்ஆனந்தை அறிமுகம் செய்து அவரது தந்தையும், தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் பேசுகையில்,"நாங்கள் செய்ததையும், செய்யப் போவதையும் சொல்லி ஓட்டு கேட்கிறோம். ஆனால் மோடி தி.மு.க.வையும், அதன் கூட்டணியையும் ஒழிப்போம் என பேசுகிறார். இதுவா தேர்தல் வாக்குறுதி?. கடந்த தேர்தலில் என் வீடு, எனக்கு சொந்தமான இடத்தில் இருந்தா பணம் எடுத்தார்கள். யாரோ ஒருவரது இடத்தில் இருந்து பணத்தை எடுத்துவிட்டு என் மகன் மீது வழக்கு போட்டார்கள். இன்றைக்கும் கதிர்ஆனந்தை ஏதாவது ரெய்டு விட்டு எப்படியாவது கைது செய்துவிடுங்கள் என்றும், அவரை கைது செய்தால் நான் ஜெயித்துவிடுவேன் எனவும் சில வேட்பாளர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். என் மகனை நாடாளுமன்றம் அல்ல, சிறைக்கு அனுப்பவும் நான் தயார். என் பொண்டாட்டி, பிள்ளையை விட நான் நேசிப்பது தி.மு.க. தான். எனக்கு சூதுவாது தெரியாது. நான் சொன்னதை செய்வேன். ஒரே தொகுதியில் 12 முறை தொடர்ந்து ஜெயித்து வருகிறேன். அதுவே நான் செய்த தொண்டு அல்லவா? என பேசினார்.
Tags:    

Similar News