தமிழ்நாட்டில் இயல்பை விட 18% கூடுதலாக பெய்த தென்மேற்கு பருவமழை!!

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட இந்தாண்டு 18 சதவீதம் கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2024-10-01 12:00 GMT

கன மழை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட இந்தாண்டு 18 சதவீதம் கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை 4 மாதங்கள் வரை பெய்யும். தென்மேற்கு பருவ மழையின் மூலம் தமிழகத்தில் கன்னியாகுமரி, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் மழை பொழிவை பெறும். தமிழ்நாட்டில் தீவிரமாக பெய்து வந்த தென்மேற்கு பருவமழை செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. தென்மேற்கு பருவமழையால் குறைவான மழைபொழிவை பெரும் தமிழ்நாடு இம்முறை அதிகளவிலான மழையை பெற்றுள்ளது. ஜூன் 1 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் 389.2 மி மீ மழை பெய்துள்ளது. இந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டில் பெய்யும் சராசரி மழை அளவு 328.5 மி மீ ஆகும். ஆகவே தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட 18% அதிகமாக பெய்துள்ளது.

Tags:    

Similar News