நீர்பாசன சங்கத் தலைவர் வெட்டிக் கொலை

தூத்துக்குடி அருகே நீர்பாசன சங்கத் தலைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-06-23 11:13 GMT

நீர்பாசன சங்கத் தலைவர் வெட்டிக் கொலை

தூத்துக்குடி அருகே தருவைகுளத்தை அடுத்த பாலாறுபட்டியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (57). விவசாயியான இவர் கல்மேடு பகுதி நீர்ப்பாசன சங்க தலைவராகவும் இருந்தார். மேலும் அங்குள்ள உப்பளங்களுக்கும் வேலைக்கு சென்று வந்தார். இவர் மாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று அவரது 2 மாடுகள் காணாமல் போய்விட்டது. மாடுகளை தேடி சண்முகசுந்தரம் காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளா். வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அவரது மனைவியும் மகனும் அவரை தேடிச் சென்றுள்ளனர். அப்போது அவர் காட்டுப் பகுதியில் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தார். அவரது உடலில் பல இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்தன. அவரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து தருவைகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை கொலை செய்தவர்கள் யார்? கொலைக்காண காரணம் என்ன என்பது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News