தபால் அலுவலகங்களில் தங்கப்பத்திரம் விற்பனை இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம்

தங்கப்பதிரம் சேமிப்பு திட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து பயன் பெறலாம்.

Update: 2023-12-18 06:21 GMT

தபால் அலுவலகங்களில் தங்கப்பத்திரம் விற்பனை இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் கிழக்கு தபால் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அருணாசலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தங்கப்பத்திரம் சேமிப்பு திட்டம் நிதி ஆண்டு 2023-2024 பரிவர்த்தனையை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த பரிவர்த்தனையில் ஒரு கிராம் தங்கப்பத்திரம் ரூ.6 ஆயிரத்து 199-க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் 22-ந் தேதி வரை 5 நாட்களுக்கு மட்டும் சேலம் தலைமை தபால் அலுவலகம், ஆத்தூர் தலைமை தபால் அலுவலகம், அஸ்தம்பட்டி, செவ்வாய்பேட்டை, சேலம் தெற்கு, அம்மாபேட்டை, அழகாபுரம், பேர்லேண்ட்ஸ், கொண்டலாம்பட்டி, கெங்கவல்லி, பேளூர், ஆட்டையாம்பட்டி, வீரபாண்டி, தம்மம்பட்டி, வாழப்பாடி, தலைவாசல், மல்லூர், ஏற்காடு உள்ளிட்ட அனைத்து துணை தபால் அலுவலகத்திலும் தங்கப்பத்திரம் பெற்றுக் கொள்ளலாம். இந்த சேமிப்பு திட்டத்தில் முதலீடு காலம் 8 வருடம். தேவைப்படின் 5 வருடங்களில் விலக்கி கொள்ளும் வசதியும் உள்ளது. ஆண்டுக்கு 2.5 சதவீதம் வட்டி 6 மாதத்துக்கு ஒருமுறை பெற்றுக் கொள்ளலாம். முதிர்வு தொகை 24 கேரட் தங்கத்துக்கு ஈடாக அப்போதைய தங்கத்தின் மதிப்புக்கு பெற்றுக் கொள்ளலாம். தங்கப்பதிரம் சேமிப்பு திட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து பயன் பெறலாம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News