தகாத உறவு மனைவிக்கு தெரிந்ததால் வாலிபர் தற்கொலை

காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Update: 2023-12-02 06:00 GMT

தகாத உறவு மனைவிக்கு தெரிந்ததால் வாலிபர் தற்கொலை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் கொண்டலாம்பட்டி அருகேயுள்ள பூலாவரி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ்வரன் (48), கூலி தொழிலாளி. இவரது மனைவி புவனேஸ்வரி. இந்நிலையில் விக்னேஷ்வரனுக்கும் விழுப்புரத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கும் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த புவனேஸ்வரி, விக்னேஷ்வரனை கண்டித்துள்ளார். இது தொடர்பாக கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட விக்னேஷ்வரன் வீட்டில் தூக்கில் தொங்கினார். குடும்பத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News