துபாய் துறைமுகத்துக்கு வந்த இந்திய கடற்படை கப்பலுக்கு உற்சாக வரவேற்பு

துபாய் துறைமுகத்துக்கு வந்த இந்திய கடற்படை கப்பலுக்கு உற்சாக வரவேற்பு

Update: 2023-12-15 07:49 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

துபாய் ராஷித் துறைமுகத்துக்கு இந்தியாவின் கடற்படை கப்பலான ’சாஜக்’ மூன்று நாட்கள் நல்லெண்ண பயணமாக வந்தது. இந்த கப்பலுக்கு இந்திய துணை தூதரகம் மற்றும் அமீரக கடற்படையின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய துணை தூதர் சதீஷ் குமார் சிவன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்திய பாரம்பரிய நடன நிகழ்ச்சியும் நடந்தது.

Tags:    

Similar News