ஈராக்கில் ‘ஹர்கர்திரங்கா’ விழிப்புணர்வு நிகழ்ச்சி

Update: 2024-08-15 09:49 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் ‘ஹர்கர்திரங்கா’ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

இந்திய அரசு இந்தியாவின் 78வது சுதந்திர தினத்தையொட்டி பொதுமக்கள் இந்திய தேசிய கொடியுடன் செல்பி எடுத்து அதனை இணையத்தில் பதிவிடவும், தங்களது வீடுகளில் இந்திய தேசியக் கொடியை ஏற்றி புகைப்படம் எடுத்து பதிவிடவும் கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்திய தூதர் பிரசாந் பிசே இந்திய தூதரக ஊழியர்களுடன் இந்திய தேசிய கொடியை குழுவாக காண்பித்தார்.

ஈராக் நாட்டில் வசித்து வரும் இந்தியர்கள் இந்திய தேசிய கொடியுடன் வரும் 15 ஆம் தேதி வரை புகைப்படம் எடுத்து அனுப்பி வைக்கவும் வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

Similar News