குவைத் தமிழர் எழுச்சி மாநாடு - மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரிக்கு உற்சாக வரவேற்பு
குவைத் தமிழர் எழுச்சி மாநாடு - மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரிக்கு உற்சாக வரவேற்பு;
By : King 24x7 Website
Update: 2024-02-23 14:22 GMT
குவைத் தமிழர் எழுச்சி மாநாடு - மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரிக்கு உற்சாக வரவேற்பு
மனிதநேய ஜனநாயக கட்சியின் அயல்நாட்டு பிரிவான மனிதநேய கலாச்சார பேரவையின் குவைத் மண்டலம் சார்பில் ஆறாவது மண்டல மாநாடு "குவைத் தமிழர் எழுச்சி மாநாடு" வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணிக்கு தஸ்மா அரங்கில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற தாயகத்திலிருந்து மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி, எழுத்தாளர் சமூகநீதி பேச்சாளர் பேரா.சுந்தரவள்ளி, சமூகநீதி பேச்சாளர் ஜீவ சகாப்தன் குவைத் வருகை புரிந்தனர். அவர்களுக்கு குவைத் மண்டலம் சார்பாகவும், குவைத்தில் உள்ள பல்வேறு அமைப்பினர், சமூக ஆர்வலர்கள், மனிதநேய சொந்தங்கள் சார்பாகவும் உற்சாகமாக வரவேற்பு வழங்கினர்.