மாணிக்கம்பாளையத்தில் ஏ.ஐ.டி.யூ.சி., மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்

Update: 2023-10-04 11:50 GMT

நிர்வாகிகள் கூட்டம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மாணிக்கம்பாளையத்தில் ஏ.ஐ.டி.யூ.சி., மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

எலச்சிபாளையம் அருகே உள்ள, மாணிக்கம்பாளையம் கட்டுமான சங்க அலுவலகத்தில் நடந்த ஏ.ஐ.டி.யூ.சி., மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். இதில், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், உடல் உழைப்பு தொழிலாளர்கள் நலவாரியத்தில் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக ஓய்வூதியம் வரவில்லை. உடனடியாக அரசு அந்த ஓய்வூதியத்தை வழங்க வேண்டும், கட்டுமான உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியமாக ரூ.3000 வழங்க வேண்டும், அவர்களுக்கு தீபாவளி போனஸ் ஆக ரூ.5000 வழங்க வேண்டும், 100 நாள் வேலைவாய்ப்பு பணியாளர்களுக்கு கடந்த 11 வாரங்களாக ஊதியம் வரவில்லை. மத்திய அரசு உடனடியாக அந்த ஊதியத்தை வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் தனசேகரன், மாவட்ட செயலாளர் ஜெயராமன், ஒடுக்கப்பட்ட வாழ்வுரிமை சங்க மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், அரசு போக்குவரத்துதுறை மாநில செயலாளர் முருகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News