கருங்கலில் தென்னிந்திய அளவிலான கைப்பந்து போட்டி.

கருங்கலில் கல்லூரிகளுக்கு இடையிலான தென்னிந்திய அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது.

Update: 2023-10-25 14:41 GMT

கைபந்து போட்டி


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

குமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தென்னிந்திய அளவிலான கைப்பந்து போட்டி இரண்டு நாட்கள் நடந்தது.

போட்டியில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து 27 அணிகள் பங்கேற்றன. இந்தப் போட்டியை புனித அல்போன்சா கல்லூரி தாளாளர் மற்றும் செயலாளர் அருட்பணியாளர் ஆண்டனி ஜோஸ், முதல்வர் அருட்பணியாளர் மைக்கேல் ஆரோக்கியசாமி ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர்.

போட்டிகளில் முதலிடத்தை கோயம்புத்தூர் கற்பகம் அணியும், இரண்டாவது இடத்தை திண்டுக்கல் ஜி டி என் அணியும், மூன்றாவது இடத்தை கோயம்புத்தூர் பியூச்சர் ஸ்டார் அணியும், நான்காவது இடத்தை கோயம்புத்தூர் கற்பகம் 'பி' அணியும் பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசு, கேடயங்களை கல்லூரியின் தாளாளர் வழங்கினார்.

Tags:    

Similar News