சிப்காட் திட்ட விரிவாக்கத்திற்கு விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு

சிப்காட் தொழிற்பூங்கா திட்டவிரிவாக்கத்திற்கு எதிர்ப்பு

Update: 2023-11-26 06:51 GMT

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் R.வேலுசாமி, 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் மேல்மா கிராமத்தை சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் பயிர் செய்யும் விளைநிலங்களை தமிழ்நாடு அரசு தொழில்துறை மூலம் கைய்யகப்படுத்தி சிப்காட் தொழிற்பூங்கா 3 வது திட்டம் விரிவாக்கம் செய்ய தமிழ்நாடு அரசு தொழில்துறை மூலம் அதற்கு உண்டான ஆயத்த பணிகள் தற்போது செய்து வருகிறது. இப்பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா திட்டம் விரிவாக்கம் செய்ய 3200 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பயிர் செய்யும் விளைநிலங்களை பரிபோகும். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கும். இப்பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க விளைநிலங்களை தமிழ்நாடு அரசுக்கு கொடுக்கமாட்டோம் என்று கடந்த மூன்று மாதங்களுக்கு மேல் அறவழியில் இப்பகுதி உள்ள விவசாயிகள் போராட்டம் செய்து வந்துள்ளனர். தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை அறவழியில் போராடிய 7 விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்த காவல்துறையை கண்டித்தும், அறவழியில் போராடிய விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரை கண்டித்தும், திருவண்ணாமலை மாவட்டம் நிர்வாகம் மூலம் சிப்காட் வேண்டாம் என்று எதிர்புக்காக போராடிய 31 விவசாயிகள் மீது பல்வேறு வகையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெறகோரியும், திராவிட முன்னேற்றக் கழக அரசின் சிறப்பு திட்டம் என்ற பெயரில் இதுவரை விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தமிழகத்தில் அனைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது. தற்போது தமிழக அரசு கொண்டு வந்த நிலம் ஒருங்கிணைப்பு சட்டம் 2023 தமிழக விவசாயிகளுக்கு விரோதமான சட்டம் இது தமிழக அரசு கொண்டு வந்த நிலம் ஒருங்கிணைப்பு சட்டம் 2023 இதை உடனடியாக திரும்ப பெற வழியுறுத்தி வருகின்ற 29.11.2023 புதன்கிழமை காலை 11 மணிக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் ஆதரவு கொடுத்து வருகை தரும்படி உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் R.வேலுசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Tags:    

Similar News