வடக்கலூரில் வாலிபர் மின்சாரம் தாக்கி பலி...!
வடக்கலூர் கிராமத்தை சேர்ந்த வாலிபர் மின்சாரம் தாக்கி பலியானர்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-03 10:18 GMT
அரசு மருத்துவமனை
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள வடக்கலூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி இவரது மகன் அருண்குமார் வயது 24, இவர்களுக்கு நன்னை கிராமத்தில் வயல் உள்ளது. முத்துசோளம் விளைவித்த நிலையில் இந்த வயலில் வனவிலங்குகளின் தொல்லையை கட்டுப்படுத்த மின்வேலி அமைத் திருந்தார்.
அந்த மின்வேலியில் சிக்கிய குரங்கை நேற்று இரவு அகற்றியபோது அருண் குமார் மீது மின்சாரம் பாய்ந்தது. இதையடுத்து அருண்குமாரை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
8இது குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருண்குமாரின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.