விட்டுச் சென்ற கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண் தர்ணா போராட்டம்

விட்டுச் சென்ற கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டர்.

Update: 2023-12-04 09:54 GMT
ஆட்சியர் அலுவலகத்தில் தனது கை குழந்தையுடன் அமர்ந்து கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்....
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விருதுநகர் மாவட்டம் தொட்டியபட்டி பகுதியைச் சேர்ந்த பாண்டிமீனா என்பவர் தனது கணவருடன் கடந்த ஏழு ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து குடும்பம் நடத்தியதில் ஒரு வயதில் கைக்குழந்தை உள்ளதாகவும் தற்போது தன்னை கணவர் சேர்த்துக் கொள்ளாமலும்,தன்னுடன் வாழாமலும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் இது சம்மந்தமாக விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

மேலும் இந்த மனு மீது முறையான தீர்வு கிடைக்கவில்லை எனக் கூறி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள காவல்துறை வாகனத்திற்கு முன்பாக தனது கை குழந்தையுடன் அமர்ந்து கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பாக ஏற்பட்டது. பின்னர் இதனை அறிந்த சூலக்கரை காவல் துறையினர் பாண்டிமீனா தனது கைகுழந்தை, மற்றும் அவருடன் வந்த வயது முதிர்ந்த தாயார் ஆகிய மூன்று பேரையும் அழைத்துக் கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்கு அழைத்து சென்றனர். பி

ன்னர் இந்த சம்பவம் குறித்து சூலக்கரை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News