திருப்பத்தூரில் காத்திருப்பு போராட்டம்

திருப்பத்தூரில் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் கிராம உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது!

Update: 2023-12-08 12:38 GMT

காத்திருப்பு போராட்டம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் கிராம உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது கடந்த 1999ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர்கலைஞர் கருணாநிதி கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு வேலை வழங்கி உள்ளார். இ

தனையடுத்து தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 08.08.2023 அன்று கருணையே இல்லாமல் அந்த உத்தரவை ரத்து செய்து உள்ளார். இதனை கண்டித்து திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தலைவர் சந்திரமோகன்,துணை தலைவர் பிரகாஷ் ஆகியோர் தலைமையில் வட்ட தலைவர் ரமேஷ் முன்னிலையில் 50க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மே

லும் கிராம உதவியாளர்களின் 14அம்ச கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றாவிட்டால் பல்வேறு போராட்டங்களில் ஈடுப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News