கல்லூரியில் பொங்கல் கொண்டாட்டம்

குன்னூர் மகளிர் கல்லூரியில் பொங்கல் கொண்டாட்டத்தை முன்னிட்டு, மாணவிகள் கலாச்சார நடனமாடி அசத்தினர்.

Update: 2024-01-10 10:55 GMT
நீலகிரி மாவட்டம் குன்னூர் பிராவிடன்ஸ் மகளீர் கல்லூரியில் ஆண்டுதோறும் பொங்கல் திருநாளை முன்னிட்டு மாணவிகள் மத்தியில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சமத்துவப் பொங்கல் வைத்து கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டும் கல்லூரி வளாகத்தில்பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டது. விழாவில் கல்லூரி மாணவ, மாணவிகள் தமிழகத்தின் பாரம்பரிய உடை அணிந்து, சமத்துவ பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடினர். தொடர்ந்து கல்லூரி அரங்கத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைப்பெற்றது.
Tags:    

Similar News