ஆடுகளை திருடிய நான்கு பேர் அதிரடி கைது

திருநெல்வேலி மாவட்டம், டவுன் முத்துராமலிங்கம் பகுதியில் ஆடுகளை திருடிய நான்கு பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-02-03 01:05 GMT

பைல் படம்


திருநெல்வேலி மாவட்டம், டவுன் முத்துராமலிங்கம் தெருவை சேர்ந்தவர் இசக்கியம்மாள். இவர் தனது ஆடுகளை வயல் பகுதியில் மேய விட்டிருந்தபோது காணாமல் போனதாக போலீசில் புகாரளித்தார். அதன் படி டவுன் போலீசார் வழக்கு பதிந்து ஆடுகளை திருடிய ஆலங்குளம் இசக்கி முத்து மற்றும் முருகேசன், மாடசாமி, மாரியப்பன் ஆகியோரை இன்று கைது செய்தனர். மேலும் இந்த நான்கு குற்றவாளிகளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News