ஆசிரியையிடம் நகை பறிக்க முயற்சி : முன்னாள் மாணவர் கைது

இலுப்பூர் அருகே உள்ள எருதுபட் டியில் ஆசிரியையிடம் நகை பறிக்க முயன்ற முன்னாள் மாணவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-02-07 09:04 GMT

பைல் படம்

இலுப்பூர் அருகே உள்ள எருதுபட் டியை சேர்ந்தவர் குமரவேல்(24). இவர் எருதுபட்டி தொடக்கப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியை மொபட்டில் சென்ற போது, பின்தொடர்ந்து சென்று முகத்தில் மிளகாய் பொடி தூவி தங்கச்செயினை பறிக்க முயன்றார். சுதாரித்துக்கொண்ட ஆசிரியை மொபட்டில் வேகமாக சென்று அப்பகுதி மக்களிடம் தகவல் தெரிவித்தார்.

பொதுமக்கள் வருவதை அறிந்ததும் குமரவேல் தப்பிவிட்டார். விசாரணையில் குமரவேல் ஆசிரி யையிடம் படித்த முன்னாள் மாணவர் என்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் இலுப்பூர் போலீசார் வழக்குப்பதிந்து குமரவேலை கைது செய்தனர்.

Tags:    

Similar News