ராமநாதபுரத்தில் குண்டர் சட்டத்தில் இருவர் கைது

ராமநாதபுரம் சாயல்குடியில் ஹோட்டல் உரிமையாளரை தாக்கிய வழக்கில் குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்

Update: 2024-02-23 13:48 GMT

கைது செய்யப்பட்டவர்கள் 

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பஜாரில் ஜமாலியா ஹோட்டல் உரிமையாளரை 21.01.2024 அன்று இரவு அவரது ஹோட்டலுக்கு வந்த தகராறு செய்து தாக்குதல் செய்த தமிழரசன், த/பெ.ஆறுமுகம் , வெட்டுப்புலி என்ற சக்திவேல், த/பெ. மாரிமுத்து, மணிகண்டன், த/பெ. கோவிந்தன் ராஜீவ்காந்தி, த/பெ. பசும்பொன்லிங்கம் ஆகியோரே சாயல்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தமிழரசன் மற்றும் சக்திவேல் என்ற இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News