உளுந்தூர்பேட்டையில் வருவாய் துறையினர் போராட்டம்

உளுந்தூர்பேட்டையில் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

Update: 2024-02-24 12:06 GMT

உளுந்தூர்பேட்டையில் வருவாய் துறையினர் போராட்டம்

உளுந்துார்பேட்டையில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. சான்றிதழ் வழங்கும் பணிக்கான புதிய துணை தாசில்தார் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்திட வேண்டும். காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணிகளை புறக்கணித்து தாலுகா அலுவலக வாயில் முன் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் மாவட்ட இணைச் செயலாளர் ஜெயகணேஷ் தலைமையில் மாவட்ட மகளிர் அணி மீனாட்சி, புவனேஸ்வரி, வட்ட தலைவர் விஸ்வநாதன், செயலாளர் முத்துகுமார், வட்ட பொருளாளர் சபீர் அகமது உட்பட பலர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News