பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

பள்ளிக் குழந்தைகளை அடிப்பது போன்ற தண்டனையை தடுக்கும் வகையிலான விதிகளை அமல்படுத்த வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2024-04-26 09:02 GMT

கோப்பு படம் 

பள்ளிக் குழந்தைகளை அடிப்பது போன்ற தண்டனையை தடுக்கும் வகையிலான விதிகளை அமல்படுத்த வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆணைய விதிகளை அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விதிகளை மீறி, குழந்தைகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது

தொடர்பாக புகார்கள் வந்தால், அதன் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், விதிகள் அமல்படுத்தப்படுவதை கண்காணிக்க அனைத்து பள்ளிகளிலும், தலைமை ஆசிரியர், பெற்றோர், ஆசிரியர், மூத்த மாணவர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய விதிகள் முறையாக அமல்படுத்த அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News