பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது வழக்கு பதிவு

சிவகாசி அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-04-29 14:31 GMT

சிவகாசி அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


சிவகாசி அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல்.... விருதுநகர் மாவட்டம், சிவகாசி அம்மன்கோவில்பட்டி தங்கையாரோட்டை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் மனைவி நிஜிமாபேகம் (35).இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரகமத்துல்லா,சாகுல்ரகுமான் ஆகியோருக்கும் சொத்து பிரச்சினையில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. சம்பவத்தன்று நிஜிமாபேகம் வீட்டில் இருந்த போது அங்கு வந்த ரகமத்துல்லா, சாகுல்ரகுமான் ஆகியோர் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து நிஜிமாபேகத்தை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர்.இந்த சம்பவத்தில் காயம் அடைந்த நிஜிமாபேகம் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.இது குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News