தூத்துக்குடியில் மரக்கடை உரிமையாளா் தற்கொலை
தூத்துக்குடியில் குடும்பத் தகராறு காணரமாக மரக்கடை உரிமையாளா் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-05-03 16:28 GMT
தற்கொலை
தூத்துக்குடி, ராஜகோபால் நகரைச் சோ்ந்த சுப்பையா மகன் மாரியப்பன் (55). மரக்கடை உரிமையாளரான அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு இருந்ததாம். இதனிடையே, அவா் கடந்த ஏப். 28ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார்.
அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.