மொரட்டுப்பாளையத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

ஊத்துக்குளி, மொரட்டுப்பாளையம் பெட்டிக்கடை பகுதியைச் சேர்ந்த வாலிபர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2024-06-23 09:00 GMT

காவல் நிலையம்

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுக்கா மொரட்டுபாளையம் பெட்டிக்கடை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் என்பவருடைய மகன் குணசேகரன் (21). இவர் கடந்த 6 மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்றைய தினம் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் ஸ்கிரீன் துணியால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைக் கண்ட பெற்றோர் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த போது அவர் ஏற்கனவே இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து ஊத்துக்குளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags:    

Similar News