சிங்காரப்பேட்டையில் வாகன சோதனை சாவடியை மாவட்ட எஸ் பி தங்கதுரை திறந்து வைத்தார்

சிங்காரப்பேட்டையில் வாகன சோதனை சாவடியை மாவட்ட எஸ் பி தங்கதுரை திறந்து வைத்தார்

Update: 2024-07-19 14:59 GMT
ஊத்தங்கரை அருகே சிங்காரப்பேட்டையில் வாகன சோதனை சாவடியை மாவட்ட எஸ் பி தங்கதுரை திறந்து வைத்தார் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சிங்காரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வெள்ள குட்டையில் காவல் வாகன சோதனை சாவடி சிறப்பு விழா நடைபெற்றது கிருஷ்ணகிரி எஸ் பி தங்கதுரை திறந்து வைத்தார் ஊத்தங்கரை டிஎஸ்பி பார்த்திபன் முன்னிலை வகித்தார் இன்ஸ்பெக்டர்கள் சிங்காரப்பேட்டை சந்திரகுமார் ஊத்தங்கரை கந்தவேல் கல்லாவி தமிழரசி மத்தூர் பாலமுருகன் உள்ளிட்ட பலரும் முன்னிலை வகித்தனர் சோதனை சாவடியை திறந்து வைத்த எஸ் பி பேசும் போது மாவட்ட எல்லையில் உள்ள வெள்ள குட்டையில் சிசிடிவி கேமரா கண்காணிப்புடன் வாகன சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது இதன் மூலம் குற்ற நிகழ்வுகளை தடுக்க எதுவாக இருக்கும் இந்த சோதனை சாவடியில் 24 மணி நேரமும் போலீசார் காவல் பணியில் ஈடுபடுத்தப்படுவர் சிசிடிவி வசதிகள் உடன் அமைக்கப்பட்டுள்ளதால் கண்காணிப்பு பணிகள் கண்டறிய ஏதுவாக இருக்கும் என்று கூறினார் முடிவில் அண்ணாமலை எஸ்ஐ நன்றி கூறினார்

Similar News