பூமி பூஜை நிகழ்வில் பங்கேற்ற ஈரோடு எம்பி

புதிய பணிகளுக்கான பூமி பூஜையில் ஈரோடு எம்பி பங்கேற்றார்

Update: 2024-09-04 13:30 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி தூய்மை இந்தியா திட்டம்.2.0) 2022-2023 திட்டத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டுவதற்கு ரூ.10.79 கோடி மதிப்பீட்டில் பூமி பூஜை புதன் அன்று நடைபெற்றது.இந்த நிகழ்வில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எம்..மதுரா செந்தில், ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் ஆகியோர் முன்னிலையில் பூமி பூஜை நடைபெற்றது. இந்த விழாவில் நகர மன்ற தலைவர் மோ.செல்வராஜ், நகர மன்ற துணைத் தலைவர் ப.பாலமுருகன், ஆணையாளர் தாமரை ஆகியோர் தலைமை வகித்தனர். நகர திமுக நிர்வாகிகள், நகர் மன்ற உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள், சார்பு அணியின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மற்றும் பொதுமக்கள் திரளாக இதில் கலந்து கொண்டனர்....

Similar News