இரண்டு ஹான்ஸ் புகையிலை பாக்கெட் விற்பனைக்கு வைத்திருந்த கடை பூட்டி சீல் வைப்பு

, மயிலாடுதுறை மாவட்டம் கொண்டத்தூர் கிராமம், குருமாணக்குடி என்ற உட்கிராமத்தில் முருகன் திரவியம் என்பவருடைய பெட்டி கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை இரண்டு ஹான்ஸ் பாக்கெட் எடுக்கப்பட்டது. அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

Update: 2024-07-21 12:22 GMT
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்ஏ.பி.மகாபாரதியின் உத்தரவின்படி சீர்காழி வட்டம்,கொண்டத்தூர் கிராமம், குருமாணக்குடி என்ற உட்கிராமத்தில் முருகன் திரவியம் என்பவருடைய பெட்டி கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா உள்ளதா என சீர்காழி வட்டாட்சியர் இளங்கோவன் தலைமையில் காவல் துறையினரால் சோதனை செய்யப்பட்டது. அதில், இரண்டு ஹான்ஸ் பாக்கெட் எடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மேற்படி கடை உணவு பாதுகாப்பு துறை அலுவலரால் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதன் பின்னர், மேற்படி முருகன் என்பவருக்கு சொந்தமான கொண்டல் கிராமத்தில் உள்ள பெட்டி கடையும் காவல் துறையினரால் சோதனை செய்யப்பட்டது.

Similar News