மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை கச்சேரி சேலையில் அதிமுகவினர் மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் தமிழ்நாடு அரசு உயர்த்தி உள்ள மின் கட்டணத்தை திரும்ப பெற கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-07-23 07:33 GMT
மயிலாடுதுறை கச்சேரி சாலையில் அதிமுகவின் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்எல்ஏ பவுன்ராஜ் தலைமையில் தமிழ்நாட்டில் 3வதுமுறையாக உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மூன்றாவது முறையாக உயர்த்திய மின் கட்டண உயர்வை திரும்ப பெறு, வீட்டு வரி உயர்வை ரத்து செய் என்பது போன்ற முழுக்கங்களை எழுப்பினர். ரேஷன் கடையில் பாமாயில் துவரம்பருப்பு கிடைக்காததை கண்டிக்கிறோம் என்று முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர். ஒன்றிய செயலாளர்கள் முன்னாள் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன், முன்னாள் மயிலாடுதுறை ஒன்றிய குழு தலைவர் சந்தோஷ்குமார், முன்னாள் எம்எல்ஏக்கள் சீர்காழி சந்திர மோகன், பாரதி, நடராஜன், முன்னாள் மாவட்ட செயலாளர் வி ஜி கே செந்தில் உட்பட 500க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Similar News