ஆசனூர் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில்ரோட்டில் நடமாடும் யானைகள் வாகனங்களை நிறுத்தி செல்லில் படம் எடுக்கும் வாகன ஒட்டிகள்

ஆசனூர் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில்ரோட்டில் நடமாடும் யானைகள் வாகனங்களை நிறுத்தி செல்லில் படம் எடுக்கும் வாகன ஒட்டிகள்

Update: 2024-07-23 08:03 GMT
ஆசனூர் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில்ரோட்டில் நடமாடும் யானைகள் வாகனங்களை நிறுத்தி செல்லில் படம் எடுக்கும் வாகன ஒட்டிகள் ஆசனூர் ரோட்டில் குட்டியுடன் இரண்டு யானைகள் முகாமிட்டுள்ள யானைகள் வாகன ஓட்டிகள் வண்டிகளை நிறுத்தி செல்போனில் படம் எடுப்பதை தவிர்க்குமாறு வாகன ஒட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை ஈரோடு மாவட்டம் சத்தி புலிகள் காப்பகம் வனப்பகுதி வழியாக செல்லும் ஆசனூர் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தினந்தோறும் ஏராளமான வாகனங்கள சென்று வருகின்றன. இந்த ரோட்டில் தற்போது யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. மழை பெய்து வனப்பகுதி பசுமையாக காணப்படுகிறது. மாலை நேரங்களில் யானைகள் காட்டுக்குள் இருந்து வெளியேறி ரோட்டோரம் மேய்கிறது. ஆசனூர் பகுதியில் யானைகள் வெளியே நடமாடும் போது அந்த வழியாக இருசக்கர வாகனங்கள் மற்றும் கார், வேன்களில் வருபவர்களும் வண்டியை நிறுத்தி குழந்தைகளுக்கு யானைகளை வேடிக்கை காட்டி மகிழ்ந்து செல்கின்றனர். சிலர் வண்டிகளை விட்டு கீழே இறங்கி தங்களது செல்போனில் யானையை வீடியோ எடுக்கிறார்கள். யானைகள் ரோட்டோரம் மேய்வதை வாகன ஓட்டிகள் ஆர்வத்துடன் படம் எடுக்க வேண்டாம். காட்டு யாகைள் தாக்கக்கூடும் என்று ரோந்து சென்ற வனத்துறையினர் எச்சரித்து வருகின்றனர். வனவிலங்குகள் ரோட்டை கடக்கும் போது வாகனங்கள் வேகமாக செல்ல வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

Similar News