தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் போராட்டம்!
3 குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற பணிகளை புறக்கணித்துள்ளனர்.
புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் இன்று முதல் 26ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்துகின்றனர். இதன் காரணமாக நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், வருகிற 26 ஆம் தேதி டெல்லியில் நாடு தழுவிய அளவில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக 10 வழக்கறிஞர்கள் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.