கொடைக்கானலில் குட்டி யானை இறப்பு

கொடைக்கானலில் குட்டி யானை இறப்பு

Update: 2024-09-16 16:56 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் குட்டி யானை இறந்ததால் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், கூக்கால் பஞ்சாயத்து, பெருங்காடு ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதி உள்ளது . இங்கு 1 1/2 வயது மதிப்புள்ள குட்டி யானை ஆற்று நீரை கடக்கும் போது எதிர்பாராத விதமாக பாறையில் கால் சிக்கிக்கொண்டு காலை எடுக்க முடியாமல் கால் புண்ணாகி யானை இறந்தது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் மருத்துவக் குழுவினருடன் உடன் சென்று பரிசோதனை செய்து குட்டி யானையின் உடலை அடக்கம் செய்தனர்.

Similar News