மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் எம்எல்ஏ வை முற்றுகையிட்ட பொதுமக்கள்

பொன்னேரியில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் எம்எல்ஏ வை முற்றுகையிட்டு வீட்டு மனை கேட்ட கிராம பொதுமக்கள்

Update: 2024-07-25 06:09 GMT
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் இன்று நடைபெற்றது இதில் பங்கேற்ற பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரை முற்றுகையிட்டு வீட்டு மனை கேட்ட கிராமப் பொதுமக்கள் உறுதியளித்து மூன்று ஆண்டுகள் ஆகிறது வழங்கவில்லையே எப்பொழுது வீட்டுமனை பட்டா கொடுப்பீர்கள் என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர். அப்போது சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தான் எம்எல்ஏ ஆகி மூன்று வருடம் தான் ஆகிறது கட்டாயம் கொடுத்து விட்டு தான் செல்வேன் என்று கூறியதுடன் அருகில் இருந்த பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன் மற்றும் தடப்பெரும்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பாபு ஆகியோரை அழைத்து உடனடியாக வீட்டுமனை இருக்கும் இடத்தை ஆராய்ந்து பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்

Similar News