நோய் கொடுமையால் விபரீதம்: அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு முதியவர் தற்கொலை

போலீசார் விசாரணை

Update: 2024-07-26 03:28 GMT
சேலம் மணியனூரை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 70). இவருக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம், கல்லீரல், சிறுநீரக நோய்கள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு அவர் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்துள்ளார். இந்த நோய்களால் மன உளைச்சலில் இருந்து வந்த அவர் நேற்று முன்தினம் அளவுக்கதிகமான மாத்திரைகளை சாப்பிட்டு விட்டு வீட்டில் மயங்கி விழுந்தார். இதையடுத்து குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். இந்த சம்பவம் குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News