கஞ்சா பழக்கத்தால் இளைஞர் தற்கொலை

குமாரபாளையத்தில் கஞ்சா பழக்கத்தால் இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2024-07-26 08:36 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி சாலையில் வசிப்பவர் கார்த்தி, 27. கூலி. இவர் ஆறு மாத காலமாக கஞ்சா பழக்கத்திற்கு ஆளாகி இருந்துள்ளார். தாயார் கண்டித்தும் இந்த பழக்கத்தை விடவில்லை. இரண்டு மாதம் முன்பு கஞ்சா வைத்திருந்ததாக, குமாரபாளையம் போலீசார் கைது செய்து, நீதிமன்ற உத்திரவின்படி, சேலம் மத்திய சிறையில் 54 நாட்கள் அடைத்தனர். ஜாமீனில் வெளிவந்து, திருச்செங்கோடு மதுவிலக்கு போலீஸ் ஸ்டேஷனில் 18 நாட்களாக கையெழுத்து போட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி, வாழ பிடிக்கவில்லை என்று தாயாரிடம் கூறியுள்ளார். ஜூலை 24ல் மாலை 05:00 மணியளவில், இவரது தம்பி மனைவி பவித்ரா, கார்த்தியின் தாயார் சுந்தரிக்கு போன் செய்து, கார்த்தி வீட்டில் படுக்கையறையில் உள்ள மின்விசிறியில் தூக்கு மாட்டி தொங்குவதாக கூற, நேரில் வந்து, அக்கம் பக்கம் உள்ளவர் உதவியுடன் கீழே இறக்கி குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இவரை பரிசோதித்த டாக்டர் இவர் ஏற்கனவே இறந்து விட்டார் என கூறினார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Similar News