முன்னாள் முதல்வர் கலைஞரின் ஆறாம் ஆண்டு நினைவு தின அமைதி பேரணி மற்றும் மலர் அஞ்சலி

குமாரபாளையத்தில்முன்னாள் முதல்வர் கலைஞரின் ஆறாம் ஆண்டு நினைவு தின அமைதி பேரணி மற்றும் மலர் அஞ்சலி

Update: 2024-08-07 09:47 GMT
தமிழக முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஆனங்கூர் பிரிவு சாலை பகுதியில் இருந்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. அமைதி ஊர்வலமானது ஆனங்கூர் பிரிவு சாலையில் தொடங்கி, சேலம் முதன்மை சாலை, பள்ளிபாளையம் பிரிவு சாலை, வழியாக குமாரபாளையம் திமுக கழக அலுவலகம் முன்பு முடிவடைந்தது. பின்னர் அங்கு மேடை அமைத்து வைக்கப்பட்டிருந்த திமுக முன்னாள் தலைவரும், முதல் வருமான கலைஞரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சிக்கு மேற்கு மாவட்ட திமுக அவைத் தலைவர் நடன சபாபதி தலைமை தாங்கினார். மேலும் தெற்கு ஒன்றிய செயலாளர் நாச்சிமுத்து, வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வம், குமாரபாளையம் நகர வடக்கு திமுக செயலாளர் விஜய கண்ணன் ,பள்ளிபாளையம் நகர மன்ற தலைவர் செல்வராஜ், நகர செயலாளர் ஞானசேகரன்,மற்றும் நகர, ஒன்றிய, பேரூர் கழகங்களை சார்ந்த திமுக நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Similar News