சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது கொரியர் பார்சல் லாரி மோதி விபத்து

பள்ளிபாளையம் மடுத்துள்ள ஆலாம்பாளையம் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்துக்குள்ளானது

Update: 2024-08-11 11:46 GMT
திருச்செங்கோட்டில் இருந்து ஈரோட்டில் டெலிவரி செய்வதற்காக கொரியர் பொருட்களை ஏற்றிக்கொண்டு ஈரோட்டை சேர்ந்த முனி சங்கரன் என்ற ஓட்டுநர் கொரியர் பார்சல் லாரியை  பள்ளிபாளையம் நோக்கி ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலையில் ஓட்டிக் கொண்டு வந்தார். அப்பொழுது ஆலாம்பாளையம் என்ற பகுதி அருகே, வந்தபோது கொரியர் பார்சல் லாரி கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக, சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கத்தின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக கொரியர் பார்சல் வாகனத்தின் முன்பக்க பகுதி அப்பளம் போல் நொறுங்கி, சாலை ஓரம் இருந்த பள்ளத்தில் இரண்டு லாரிகளும் கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயங்களுடன் கொரியர் வாகனத்தின் ஓட்டுனர் முனி சங்கரன் மீட்கப்பட்டு, பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதிகாலை நேரத்தில் கொரியர் வாகனத்தின் ஓட்டுனர் தூக்க கலக்கத்தில் சாலையோரம் இருந்த லாரியின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினாரா!? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என பள்ளிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News